Wednesday 30 April 2014

திராவிடம் Vs தமிழர்கள்

 திராவிட கட்சிகள் Vs பள்ளர்கள்:
   திராவிட கட்சிகளுக்கும் பள்ளர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும்  வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள்(தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.பள்ளர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள்,பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.


   ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும்,அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கன்களே,அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும்,அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

திராவிடர்கள் Vs ஈழ தமிழர்கள்:

        தமிழ் நாட்டில் பள்ளர்களுக்கு எதிராக நடந்த அதே அடக்குமுறைகளும்,இன அழிப்புகளும் அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடகின்றது.அங்கு திராவிட கட்சிகளின் இடத்தில் இருப்பவர் ராஜபக்சே.நினைத்திருந்தால் அன்று ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்த இன அழிப்பை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை.காரணம் அங்கு இறப்பவர்கள்  தமிழர்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ.இப்படி உலகில் தமிழர்கள் எங்கு வீழ்ந்தாலும் அதற்கு பின்னால் கண்டிப்பாக திராவிடர்கள் இருகின்றனர்.
  ஈழத்தில் இன அழிப்பை நிகழ்த்திய ராஜ பக்சே அரசே பின்னாளில் அவற்றை விசாரிக்க ஒரு ஆணையம் அமைத்து தமிழர்களுக்கு நீதி கிடைத்திட கடுமையாக முயற்சிகள் எடுக்கின்றது.ஆனால் கொடுமை என்னவெனில் பள்ளர்களின் மீது பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு சம்பத் கமிசன் மூலம் துப்பாக்கி 

சூட்டை நியாயப்படுத்திய  ஜெயலலிதா அரசு,தமிழக 

சட்டமன்றத்தில் ராஜ பக்க்ஷேவிற்கு எதிராக ஒரு வரலாற்று 

சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது

திராவிடர்கள் Vs  தமிழ் சாதிகள்:





     பரமக்குடி துப்பாக்கி சூடானது,உண்மையில் தமிழர் அல்லாத  ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.ஆனால் அதை ஒரு சாதி மோதலாக  திரிக்கும் முயற்சியும் நடந்தது.பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.

    இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும்,விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..அதற்கான சமீபத்திய உதாரணம் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும்.மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே!!!


திராவிடர்கள் Vs  தமிழ் ஈழ மாணவர் கூட்டமைப்பு
        ராஜபக்சே அரசு மீது இன அழிப்பிற்காக மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழகம் எங்கும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை நடத்தியது.தமிழகத்தில் கிந்தி எதிர்ப்பு போராட்டர்திற்கு பிறகு எந்த ஒரு அரசியல்,சாதிய கட்சிகளின் துணை இல்லாமல் தன்நெளிச்சியாக தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற ஒரே போராட்டம் இந்த தமிழ் தேசியத்திற்கான மாணவர் போராட்டம் .திராவிட கட்சிகளின் தமிழரை பிரித்தாளும் சூழ்ச்சியையும் தாண்டி தமிழர் அனைவரும் சாதி மதங்களையும் தாண்டி தமிழர் என்று ஓர் அணியில் திரண்டு போராடிய போராட்டம் இதுவே ஆகும்.இதை சற்றும் எதிர்பார்க்காத இருபெரும் திராவிட கட்சிகள் தங்களின் ஆட்சியில் கல்லூரிகளுக்கு விடுமுரையிட்டு முற்றுப்புள்ளி வைத்தாணர்.
முள்ளிவாய்கால் முற்றம் இடிப்பு:

        ஈழ போரில் இறந்த பல லட்ச தமிழர்களின் நினைவாக தஞ்சை         மண்ணில்        முள்ளிவாய்கால் முற்றம் அமைக்கப்பட்டது.அதை முடக்கும் விதமாக ஜெயலலிதா தலைமையிலான திராவிட அரசு பல முயற்சிகள் மேற்கொண்டது.அணைத்து தடங்கல்களையும் தாண்டி தமிழர்களுக்கான ஒரு நினைவிடம் முதல்முதலில் தமிழ் மண்ணில் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.அதை சற்றும் விரும்பாத இந்த அரசு சில நாட்களிலேயே  முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தை சுற்றிவுள்ள சுற்றுசுவரை இடித்துதள்ளி வழக்கம் போல தமிழர்களின் நினைவுகளை கம்பி வேலிகளுக்குள் தள்ளியது.
   இவ்வாறாக திராவிடர்களுக்கு எதிராக தமிழர்கள் அணிதிரளும் போதெல்லாம்,அவர்கள் சொந்த மண்ணிலேயே ஒடுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.காரணம் தமிழர்கள் மீண்டெளுந்தால்,திராவிடர்களால் தமிழ் மண்ணில் வாழ வழியில்லாமல் போய்விடும்.இதை உணர்ந்து தமிழ் இனம் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்.


Tuesday 14 May 2013


சாதிய ஏற்ற தாழ்வுகள்-ஓர் ஆய்வு:

     உலகாண்ட தமிழர்களை சில தமிழர்களின் துணைகொண்டு வீழ்த்தி வடுகர்கள் ஆட்சியை பிடித்தனர்.அதற்கு பிறகே தமிழினம் என்ற ஒற்றை குடையின் கீழ் இருந்த தமிழர்கள், சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டனர்.தொழில் ரீதியான இனக்கூருகளை சாதிகளாக பிரித்து அதில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தினர்.

உயர்வு/தாழ்வு:
       தமிழர்களின் அரசு அமைப்பில் சில படிநிலைகள் இருந்தன.பொதுவாக ஏற்ற தாழ்வு என்பது படிநிலையில் மேல் இருப்பவர்களை உயர்ந்த சாதியாகவும்,அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை கீழ் சாதியாகவும் பிரித்திருக்க வேண்டும்.

வடுக சூழ்ச்சி :
     ஒன்று பட்ட தமிழர்களின் தலைவனான மள்ளர்கள் இன்று தாழ்த்தப்பட்ட சமூகமாகவும்,அரசு அமைப்பில் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிற தமிழ் சாதிகள் ஆதிக்க சாதியினராகவும் இருப்பது எப்படி?
 அதற்கான விடை “வடுக சூழ்ச்சி

பொதுவாக ஒரு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிற்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்தில் சில வேறுபாடுகள் இருக்கும்.படிநிலையில் கீழ் இருபவர்களுக்கு அந்த அதிகாரத்தின் மேல் கண்டிப்பாக ஒரு ஈர்ப்பு இயற்கையாகவே இருப்பதுண்டு.இது மானுட இயல்பு.அந்த அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது யாரும் தவற விடுவதில்லை.

     மள்ளர்களை அடிமை படுத்த நினைத்த வடுகர்கள் அப்படியொரு வாய்ப்பை பிற சகோதர தமிழ் சாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தனர்.மள்ளர்களின் அதிகாரங்களை பிடுங்கி பிற சாதியுனருக்கு கொடுத்து மள்ளர்களை தாழ்ந்தவர்களாகவும் மற்ற சாதியினரை உயர்ந்தவர்களாகவும் பறைசாற்றினர். மள்ளர்களை அடிமை படுத்த அணைத்து அதிகாரங்களையும் பிற சாதியினருக்கு கொடுத்ததோடு,அவர்களின் நிலங்களையும் கையகப்படுத்தி அவர்களை விவசாய கூலிகளாக மாற்றி பல அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தினார்.ஆனால் அதில் இன்றுவரை அவர்களால் முழுமையான வெற்றி பெற முடியவில்லை.தமிழகத்தின் 65% நிலங்கள் மள்ளர்கள் கைவசமே இன்றளவும் இருகின்றது.

     தமிழர்களை பிரிப்பதில் வடுகர்கள் பல நுணுக்கங்களை கையாண்டனர்.தேவேந்திர குல வேளாளர்கள் என்பவர்கள்  குடும்பன்,மூப்பன், காலாடி,மண்ணாடி என பல உட்பிரிவுகளை கொண்ட ஒரு இனம்.இதில் குடும்பர்கள்  எனப்படுபவர்கள் படிநிலையில் அனைவருக்கும் மேல் இருப்பவர்கள்.ஆனால் அவர்கள் இன்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும்(SC),மற்றவர்கள் பிற பிரிவுகளான BC,MBC,DNC போன்ற பட்டியலிலும் உள்ளனர்.

அரசியல் அடிமைகள்:

     
      மள்ளர்களை அடிமை படுத்துவதாக நினைத்துகொண்டிருக்கும் பிற சகோதர தமிழ் சாதிகள் உண்மையில் வந்தேறி வடுகர்களின் அரசியல் வாரிசுகளான திராவிடர்களின் அரசியல் அடிமைகளே.மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு எத்தனை தமிழர்கள் இம்மண்ணை ஆண்டுள்ளனர்?

ஒன்றுபடு தமிழா:

    
        வடுகர்களின் சூழ்ச்சியால் ஒன்றாய் இருந்த எம் தமிழினம் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டது.அதே பிரிவினையை பயன்படுத்தி இன்றளவும் வடுகர்களின் வாரிசுகளே நம் தமிழ் மண்ணை ஆண்டு வருகின்றனர்.ஆதிக்க சாதியாய் தங்களை காட்டிக்கொள்ளும் பிற தமிழ் சாதிகளால் இன்றளவும் அரியணையில் அமரமுடியாததற்கு காரணம் என்ன?
     சாதிகளை கடந்த தமிழினம் ஒன்று அமைவதே இதற்கு ஒரே தீர்வு.

            “தமிழராய் இணைவோம்,மீண்டும் தமிழர் ஆட்சி அமைப்போம் 

தமிழர்களின் அரசியல்


தமிழர்களின் அரசியல் கட்டமைப்பு:
     
          தமிழர்களின் ஆட்சியில் அரசு என்பது ஒரு உறுதியான கட்டமைப்பாக இருந்தது.தமிழர்களின் தலைவனாக அன்றைய காலகட்டங்களில் குடும்பன் என்னும் பிரிவை சேர்ந்தவர்களே இருந்துள்ளனர்.அவர்களுக்கு உதவியாக  மூப்பன், காலாடி, மண்ணாடி என்று அழைக்கப்பட்டவர்கள் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற ஒரே பிரிவின்கீழ் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் படைவீரர்களாகவும்,வேளாண்தொழில் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தமிழர்களின் அரசியல் கட்டமைப்பில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர்.
     இவர்கள் தவிர தொழில் சார்ந்து பல பிரிவுகள் இருந்தன.

நிறுவனம்:
       

    இன்று நிறுவனம் என்பது பல படிநிலைகளை கொண்டது.இதில் படிநிலையில் மேல் இருபவர்களுக்கும்,படிநிலையில் கீழ் இருப்பவர்களுக்கும்,அதிகாரத்தில் சில வேறுபாடுகள்  என்பது உண்டு.இதை ஏற்றதாழ்வுகள் என்று கூற முடியாது.

அரசு:


     அரசு என்பது ஒரு நிறுவனத்திற்கு உரிய அதே கட்டமைப்பை கொண்டது.இதில் அதிகார ரீதியாக சில வேறுபாடுகள் இருந்தபோதிலும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது.

Monday 29 April 2013

"தமிழும் சாதியும்"

தமிழ்:
     தமிழ் எனபது வெறும்  வார்த்தை அல்ல.10000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒரு இனத்தின் மொழி, பண்பாட்டு அடையாளம்.தமிழர்கள்  என்ற ஒற்றை  குடையின்கீழ் இருந்த நம் சமூகம்,தமிழர் அல்லாதவர்களின் சுயநலன்களுக்காக நமது ஒற்றுமையை இழந்து,நமது நாடு இழந்து,நமது அடையாளங்களையும் இழந்து,நாகரிகம் என்ற போர்வையால் நமது கலாச்சாரத்தையும்,மொழியையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கின்றோம்.
இனம்-அன்று:
           தமிழர்களின் ஆட்சி காலத்தில் சாதி என்ற சொல் வழக்கில் இருந்ததாக தெரியவில்லை.தமிழன் என்ற ஒரு குடையின்கீழ் சில தொழிற்சார்ந்த பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளது.அவர்கள் செய்த தொழில்கள் மற்றும் அவர்கள் இருந்த இடம் சார்ந்து சில பெயர்களால் அழைக்கப்பட்டனர்.இதில் எவரும் உயர்ந்தவரும் இல்லை,தாழ்ந்தவரும் இல்லை.அனைவரும் ஒற்றுமையை உணர்வுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழரின் வீழ்ச்சி:
தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது.அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
   “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
   நம்மில் ஒற்றுமை நீங்கினால்
   அனைவருக்கும் தாழ்வு”
- என்பது பழமொழி. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் “நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு” என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்தனர்.
சாதி :
   வாழ்ந்த இடம் மற்றும் செய்த தொழில் சார்ந்து இருந்த பிரிவுகளை நிரந்தர பிரிவுகள் ஆக்கி அதில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தினர்.இதனால் பன்னெடுங்காலமாய் நம் தமிழ் இனத்தின்  அடிப்படை ஆதாரமாய் இருந்த ஒற்றுமை உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் சரியத்தொடங்கியது.இன்று வரை தமிழர்களை ஆள்பவர்கள் வந்தேறி வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்களே.திராவிடர்களின் மூதாதையர்களான வடிகர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழர்களை  பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றும் சிறப்பாக செயல்படுத்தி நம்மை ஆண்டு வருகின்றனர்.
நாளைய சாதிகள்:
     இன்று கிட்டத்தட்ட அனைத்தும் தொழிலையும் அனைவரும் செய்கின்றனர்.இன்று நம் சமுகத்தில் தொழில்ரீதியாக பொறியாளர்,மருத்துவர் என்று பலர் இருகின்றனர்.நாளையே பொறியாளர்,மருத்துவர் போன்றோர் உயர்ந்த சாதியினர்,பிற தொழில் செய்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்ற அரசானை வந்தேறி வடுக வாரிசுகளால் பிரப்பிக்கப்டலாம்.இது முட்டாள்தனமான காரியமாக தெரியலாம்.ஆனால் நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ளும் நாம், இந்த முட்டால்தனத்தைதான் பலநூறு வருடங்களாக செய்து வருகின்றோம் என்பதுதான் மிகவும் வருத்தப்படுக்கூடிய ஒன்று.
                  சிந்தித்து செயல்படுவீர் தமிழர்களே!!!!